Sunday, April 4, 2010

குருவி பாட்டு

குருவி பறந்து வந்ததாம்bird,children,nature,inspiration-fb1d56ba5f002d93b61f093007404d0d_h
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்
-கவிமணி தணிகை உலகநாதன்

 

birds-001

No comments:

Post a Comment