skip to main |
skip to sidebar

ஹாய் குட்டிஸ் இதோ உங்களுக்காக
தேன் உறிஞ்சும் அணில் படம் இங்கு .
தவளையாரே தவளையாரே எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம் நடந்து போகிறேன்
நீண்ட நேரம் எதுக்காக சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று சேதி சொல்லுறேன்
குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்
-கவிமணி தணிகை உலகநாதன்
