skip to main |
skip to sidebar
குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்
-கவிமணி தணிகை உலகநாதன்

கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க?
காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்க போறேங்க
கம்பளிச் சட்டை ஜோரா ?
இருக்கு தந்தாங்க?
கடவுள் தந்த பரிசுதாங்க
வேற யாருங்க
யாரு
அணிலே அணிலே ஓடிவா
அழகிய அணிலே ஓடிவா
கொய்யாமரம் ஏறிவா
குண்டுப்பழம் கொண்டுவா
பாதிப்பழம் என்னிடம்
மீதிப்பழம் உன்னிடம்
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்
