பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
யானை மேலே ஊர்வலமாம்
ஒட்டகசிவிங்கி நாட்டியமாம்
ஊர்க் குருவியின் பின் பாட்டாம்
அற்புதமான சாப்பாடாம்
தாலி கட்டும் நேரத்துல
மாப்பிப்ளை பூனையைக் காணோமாம்
வந்தவரெல்லாம் தேடினாராம்
வருத்தம் கொண்டு திரும்பினாராம்
பக்கத்து வீட்டுப் பாலைத்தான்
திருடி அதுவும் குடித்ததாம்
திருட்டுப்பூனைக்கு என் பெண்ணை
திருமணம் செய்து தரமாட்டேன்
வேண்டாம் இந்த சம்பந்தம்
வெட்கக் கேடு போய் வரலாம்
Sunday, January 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment