Sunday, July 18, 2010

தேன் உறிஞ்சும் அணில்

3748135494_66c3cd9435

ஹாய்  குட்டிஸ்  இதோ உங்களுக்காக 

தேன் உறிஞ்சும் அணில் படம் இங்கு .

Sunday, May 16, 2010

தவளையாரே

leopard-frog தவளையாரே தவளையாரே எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம் நடந்து போகிறேன்
நீண்ட நேரம் எதுக்காக சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று சேதி சொல்லுறேன்

Sunday, April 4, 2010

குருவி பாட்டு

குருவி பறந்து வந்ததாம்bird,children,nature,inspiration-fb1d56ba5f002d93b61f093007404d0d_h
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்
-கவிமணி தணிகை உலகநாதன்

 

birds-001

Sunday, March 7, 2010

கரடி மாமா

கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க?
காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்க போறேங்க
கம்பளிச் சட்டை ஜோரா ?

378px-Black_bear_large

இருக்கு தந்தாங்க?
கடவுள் தந்த பரிசுதாங்க grizzly-bearவேற யாருங்க
யாரு

Sunday, February 21, 2010

அணிலே அணிலே ஓடிவா

அணிலே அணிலே ஓடிவா grey-squirrel-eating2
அழகிய அணிலே ஓடிவா                   
கொய்யாமரம் ஏறிவா
குண்டுப்பழம் கொண்டுவா
பாதிப்பழம் என்னிடம்
மீதிப்பழம் உன்னிடம்
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்

468195506_c755ebbf28_squirrel

Sunday, January 24, 2010

நாய்குட்டி

தோ தோ நாய்குட்டி
துள்ளி ஓடும் நாய்குட்டி!
பாலை குடிக்கும் நாய்குட்டி
பாசம் காட்டும் நாய்குட்டி!
கரிகள் தின்னும் நாய்குட்டி
காவல் காக்கும் நாய்குட்டி!
வாலை ஆட்டும் நாய்குட்டி
வாட்டம் போக்கும் நாய்குட்டி!
வீட்டை சுற்றும் நாய்குட்டி
விரும்பும் நல்ல நாய் குட்டி

எங்கள் வீட்டுப் பூனை

எங்கள் வீட்டுப் பூனை
இருட்டில் உருட்டும் பூனை
அங்கும் இங்கும் தேடும்
ஆளைக் கண்டால் ஓடும்
காலால் எலியைப் பிடிக்கும்
தயிரை ஏறிக்குடிக்கும்
நாவால் உடலைத் துடைக்கும்
நாற்காலியின் கீழே படுக்கும்

காக்கா நிறம் கறுப்பக்கா

காக்கா நிறம் கறுப்பக்கா
காக்கா கத்தும் கா கா கா
சின்ன சின்ன அலகக்கா
சேர்ந்தே தின்னும் ஒன்றாக
வட்ட வட்ட கண்ணக்கா
வானில் பறக்கும் காக்காக்கா
பட்டு போல இறக்கைக்கா
பறந்து செல்லும் காக்காக்கா

துள்ளி ஓடும் மான்குட்டி

துள்ளி ஓடும் மான்குட்டி
புள்ளி கொண்ட மான்குட்டி
கொம்பு கொண்ட மான்குட்டி
குதிக்கும் நல்ல மான்குட்டி
காட்டில் வாழும் மான்குட்டி
இலையைத் தின்னும் மான்குட்டி
ஓடியாடும் மான்குட்டி
ஒன்றாய் வாழும் மான்குட்டி

கரடி மாமா வருகிறார்

கரடி மாமா வருகிறார்
கண்ணா இங்கே ஓடி வா
குட்டிக்கரணம் போடுறார்
குதித்து குதித்து நடக்கிறார்
கோலைத் தோளில் வைக்கிறார்
குனிந்து நிமிர்ந்து பார்க்கிறார்
கரடி வித்தை பார்க்கவே
காசு பத்து கொடுக்கலாம்

குள்ள நரி

குள்ள நரியே குள்ள நரியே எங்கே போகிறாய்?
குறுக்கு வழியில் யாரை நீயும் மடக்கப் போகிறாய்?
வஞ்சகத்தால் தானே உந்தன் வயிற்றை வளர்க்கிறாய்
நல்லவனாய் நாடகமும் நடத்திக் காட்டுறாய்

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
யானை மேலே ஊர்வலமாம்
ஒட்டகசிவிங்கி நாட்டியமாம்
ஊர்க் குருவியின் பின் பாட்டாம்
அற்புதமான சாப்பாடாம்
தாலி கட்டும் நேரத்துல
மாப்பிப்ளை பூனையைக் காணோமாம்
வந்தவரெல்லாம் தேடினாராம்
வருத்தம் கொண்டு திரும்பினாராம்
பக்கத்து வீட்டுப் பாலைத்தான்
திருடி அதுவும் குடித்ததாம்
திருட்டுப்பூனைக்கு என் பெண்ணை
திருமணம் செய்து தரமாட்டேன்
வேண்டாம் இந்த சம்பந்தம்
வெட்கக் கேடு போய் வரலாம்

வெள்ளை நிற முயலக்கா

வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சின்னஞ்சிறு கைகளால்
செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய்த் தோன்றும் முயலக்கா

யானையம்மா யானை

யானையம்மா யானை
யம்மாம் பெரிய யானை
தந்தமுள்ள யானை
தடிமனான யானை
காதைப் பாரு பெரிசு
கண்கள் ரெண்டும் சிறிசு
சாதுவான யானை
சக்தி மிக்க யானை

காக்கா கண்ணுக்கு மை

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வா
கிளியே குழந்தைக்கு பழம் கொண்டு வா

குள்ளக் குள்ள வாத்து

குள்ளக் குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலை சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து

வாள் வாள் என்று குரைக்காது

வாள் வாள் என்று குரைக்காது
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
எனக்குப் பிடித்த நாய்க்குட்டி
பாலும் சோறும் உண்ணாது
பக்கம் அழைத்தால் வராது
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
எனக்குப் பிடித்த நாய்க்குட்டி
அங்கும் இங்கும் ஓடாது
அதனால் தொல்லை கிடையாது
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
எனக்குப் பிடித்த நாய்க்குட்டி
அப்படி என்ன நாய்க்குட்டி
அதிசயமான நாய்க்குட்டி
அப்பா எனக்கு வாங்கித் தந்த
ரப்பர் பொம்மை நாய்க்குட்டி

ஆட்டுக்குட்டி

துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
தாவி வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவாயோ?
பாடம் சொல்லித் தருவாயோ?
கள்ளம் இல்லை உன் மனதில்
கபடம் இல்லை உன்னிடத்தில்
பள்ளம் மேடு வந்தாலும்
பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி
தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லைக் கேட்டு வீட்டையே
சுற்றி வருமே ஆட்டுக்குட்டி

காக்கா காக்கா பறந்து வா

காக்கா காக்கா பறந்து வா
காலையில் எழுந்து பறந்து வா
சேவல் கோழி ஓடி வா
கூவி எழுப்பிட ஓடி வா
கிளியே கிளியே பறந்து வா
கிள்ளை மொழி பேசி வா
பப்பி நாய்க்குட்டியே ஓடி வா
பந்தை வாயில் கௌவி வா
வெள்ளை பசுவே விரைந்து வா
பிள்ளைக்கு பாலும் கொண்டு வா

எங்கள் வீட்டு நாய்க்குட்டி

எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றி உள்ள நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
துள்ளி ஓடும் நாய்க்குட்டி
குட்டிப் பாப்பா தன்னோடு
குதித்து ஆடும் நாய்க்குட்டி
கண்ணைப் போல வீட்டையே
காவல் காக்கும் நாய்க்குட்டி

சின்னச் சின்னப் பூனையாம்

சின்னச் சின்னப் பூனையாம்
சீறிப்பாயும் பூனையாம்
கன்னங்கரிய பூனையாம்
கருப்பு மீசைப் பூனையாம்
இரவில் சுற்றும் பூனையாம்
எலியைப் பிடிக்கும் பூனையாம்
புலியைப் போன்ற பூனையாம்
புத்திசாலிப் பூனையாம்

ஆனை ஆனை அழகர் ஆனை

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் யானை
காவேரித் தண்ணீரை கலக்கும் யானை
குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்

நல்ல நாய்க்குட்டி

சின்னச் சின்ன நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
பஞ்சுப் பொதி நாய்க்குட்டி
பன்னும் தின்னும் நாய்க்குட்டி
நன்றி சொல்லும் நாய்க்குட்டி
சின்னச் சின்னக் குழந்தைகள்
கொஞ்சி மகிழும் நாய்க்குட்டி
உன்னைக் கண்டால் பிஞ்சுகள்
நெஞ்சம் மகிழ்ந்து கொஞ்சுமே
துள்ளித் துள்ளி ஓடுவாய்
அள்ளிஅள்ளித் தூக்கலாம்
வாலை வாலை ஆட்டியே
வரவேற்பு தருவாயே

வேண்டும் முயற்சி

சிலந்தி வலையைப் பாருங்கள்
சின்னஞ் சிறிய பூச்சியே
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே
தேனிக்கூட்டைப் பாருங்கள்
திறமையோடு ஒற்றுமையாய்
பெரிய முயற்சி வேண்டுமே
பேணி வீட்டைக் கட்டுமே
எறும்புப் புற்றைப் பாருங்கள்
எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமையான முயற்சியால்
அழகுப் புற்றைச் செய்தன
குருவிக் கூட்டைப் பாருங்கள்
குடுக்கை போன்று பின்னியே
விரைவில் கட்டி முடிக்குமே
வேண்டும் முயற்சி என்றுமே!


-பெருஞ்சித்திரனார்

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு ஒன்று
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்றது வெள்ளை பசு உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளை பசு
பாலை நன்றாய் குடிக்குது கன்றுக் குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு மடி
முட்டிக்கொடுக்குது கன்றுக்குட்டி.


-வித்யா

பசு

வெள்ளை நிறப் பசுவிது
விரும்பி புல்லைத் தின்னுது
கழனி தந்தால் அன்புடன்
வாலை ஆட்டிக் குடிக்குது
தொட்டுத் தடவிக் குடுக்கையில்
தோளை மெல்ல ஆட்டுது
காலை - மாலை வேளையில்
பாலை நிறையக் கொடுக்குது
கனிவுடனே நன்மைகள்
பல நமக்குச் செய்யுது


-வல்லநாடு ராமலிங்கம்

பறவைகள்

ஆடிக் களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித் தா!
பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப்பாட சொல்லித் தா!
தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்க சொல்லித் தா!
கூவும் சேவல் இங்கே வா
கூவி எழுந்திட சொல்லித் தா!


-வல்லநாடு ராமலிங்கம்

வாத்து

தத்தி நடக்கும் வாத்திது
தண்ணீரிலே நீந்துது
கூட்டமாக செல்லுது
கருத்தாய் இரை தேடுது
சின்னக் கண்கள் கொண்டது
சிங்காரமாய் உலவுது
வாய்க்கால் வரப்பில் ஓடுது
வாய் ஓயாமல் கத்துது
பெரிய முட்டை போடுது
வெள்ளை நிற வாத்திது


-வல்லநாடு ராமலிங்கம்

கோழி

கொக்கரக்கோ - கொக்கரக்கோ
கோழி கூவுது
கூரையிலே ஏறி நின்னு
கூவிப் பார்க்குது
குப்பை கூளம் கிளறிப்பார்த்து
இரையும் தேடுது
தரையில் கிடக்கும் தானியத்தை
கிளறித் தின்னுது
விடியப் போகும் வேளையிலே
கூவி எழுப்புது
கொண்டையத் தான் ஆட்டிக்கிட்டு
நம்மைப் பார்க்குது


-வல்லநாடு ராமலிங்கம்

எறும்பு 2

எறும்புக் கூட்டம் பாருங்கள்
என்ன ஒழுங்கு பாருங்கள்
வரிசையான பயணத்தின்
வாழ்க்கை முறையை போற்றுங்கள்
சுறு சுறுப்பாய் எறும்பிது
சோம்பல் தனத்தை வெறுக்குது
வேண்டுமளவு சேமித்து
மகிழ்ச்சியாக வாழுது
உழைப்பினாலே உயர்கின்ற
உண்மை நமக்குக் கூறுது


-வல்லநாடு ராமலிங்கம்

குருவி

பஞ்சு போல் மேனியால்
பறந்து வரும் குருவியே
பக்கத்தில் வந்ததும்
பாசங் காட்டும் குருவியே
இரண்டு சிறிய கண்களால்
இரையைத் தேடும் குருவியே
இனிய கீச்சுக் குரலிலே
இசை பாடும் குருவியே
கோரைப் புற்கள் சுள்ளியால்
கூடு கட்டும் குருவியே
பொழுது சாயும் வேளையில்
கூடு திரும்பும் குருவியே
ஜோடியாக அன்புடன்
வாழ்ந்து வரும் குருவியே


-வல்லநாடு ராமலிங்கம்

வெள்ளை நிறப் பூனை

வெள்ளை நிறப் பூனையொன்று வீட்டில் இருக்குது
தொல்லை தரும் எலிகளைத்தான் துரத்திப் பிடிக்குது
செல்லமாக மடியில் வந்து ஏறிக் கொள்ளுது
சிணுங்கலாக குரலைத் தந்து அன்பு காட்டுது
பசியும் வந்தால் பாலுக்காக செல்லம் கொஞ்சுது


-வல்லநாடு ராமலிங்கம்

கருப்புநிற நாய்க்குட்டி

கருப்புநிற நாய்க்குட்டி
காவல் செய்யும் நாய்க்குட்டி
கள்ளமில்லா நாய்க்குட்டி
கடமையாற்றும் நாய்க்குட்டி
நன்றியுள்ள நாய்க்குட்டி
நன்மை செய்யும் நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
செல்லப் பிராணி நாய்க்குட்டி
உண்மை வாய்ந்த நாய்க்குட்டி
உள்ளம் கவர்ந்த நாய்க்குட்டி


-வல்லநாடு ராமலிங்கம்

நத்தை

நத்தைக் கூட்டைப் பாருங்கள்
நகரும் அழகை ரசியுங்கள்
கெட்டியான வீட்டினுள்
அமைதியாக வாழுது
மெல்ல எட்டிப் பார்க்கையில்
பட்டு மேனி மின்னுது
மழையின் காலம் முழுவதும்
கவலை இன்றி உலவுது
ஆசை கொண்டு தொடுகையில்
அதுவும் வாசல் அடைக்குது


-வல்லநாடு ராமலிங்கம்

மாடிவீட்டுத் தாத்தா

மாடிவீட்டுத் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன

உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

எறும்பு

சின்னச் சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே!
உன்னைப் போல நானுமே
உழைத்திடவே வேனுமே!
ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய்!
நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே



-பேராசிரியர் கா நமச்சிவாயர்

குட்டி எலியும் சிங்கமும்

குட்டி எலி அன்றொரு நாள்
குதிச்சு குதிச்சு ஓடிச்சாம்!
யானை, புலி, சிங்கம் காண
ஆசை கொண்டு ஓடிச்சாம்!
உயரமான மரத்தில் ஏறி
உலகமெல்லாம் பார்த்ததாம்!
தூரத்திலே சிங்கம் ஒன்று
தூங்குவதைப் பார்த்ததாம்!
மளமள என்று இறங்கி
அது மகிழ்ச்சியுடன் ஓடிச்சாம்!
மேலும் கீழும் பார்த்து
அதன் மீசையை பிடித்து இழுத்ததாம்!
வளைய வளைய வந்து
அதன் வாலைப் பிடித்து இழுத்ததாம்!
கோபம் கொண்டு எழுந்த சிங்கம்
குட்டி எலியைப் பிடித்ததாம்!
கையில் பிடித்த எலியை அது
கடித்து தின்ன பார்த்ததாம்!
கை கூப்பி குட்டி எலியும்
கருணை கருணை என்றதாம்!
மண்டியிட்டு குட்டி எலியும்
மன்னிப்பு என்றதாம்!
பெரிய மனசு பண்ணி சிங்கம்
பிழைத்துப்போ என்றதாம்!
விடுவிடு என்று நடந்த சிங்கம்
வேடன் வலையில் விழுந்ததாம்!
அது கர்ஜித்து அழுத ஓசை
காடு முழுதும் கேட்டதாம்!
எங்கோ கேட்ட குரல் என்று
குட்டி எலியும் வந்ததாம்!
சிங்கம் சிக்கியிருந்த வலையை அது
சின்னாபின்னமாய் கடித்ததாம்!
வெளியில் வந்த சிங்கம் எலியிடம்
நன்றி நன்றி என்றதாம்!
செய்த நன்றி மறவேன் என்று
சின்ன எலியும் சொன்னதாம்!

மயிலே குயிலே 2

மயிலே, மயிலே ஆடிவா
மக்காச் சோளம் தருகிறேன்!
குயிலே, குயிலே பாடிவா
கோவைப் பழங்கள் தருகிறேன்!

பச்சைக் கிளியே பறந்துவா
பழுத்த கொய்யா தருகிறேன்!
சிட்டுக் குருவி நடந்துவா
சட்டை போட்டு விடுகிறேன்!

ஓடைக் கொக்கு இங்கே வா
ஓடிப் பிடித்து ஆடலாம்!
மாடப் புறாவே இறங்கிவா
மடியில் குந்திப் பேசலாம்!

கூடி வாழ்வோம்

பறவை எல்லாம் பாடுச்சு
பக்கம் வந்து தேடுச்சு
கறவை மாடு சிரிச்சுச்சு
கறந்து பாலும் தந்துச்சு..!
குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு
கூட்டம் சேர கத்துச்சு
பசிக்கு இங்கே வந்திட
பாடிப் பாடி அழைச்சிச்சு..!
எங்கிருக்கும் பறவையும்
எகிறிப் பறந்து வந்துச்சு
இனத்தின் குரலைக் கேட்டுச்சு
இறங்கி வந்து பார்த்துச்சு..!
கோமாதா நமக்கு எல்லாம்
குடிக்க பாலும் தந்துச்சு
கூடி நாமும் கூட்டம் போட்டு
`அன்னை' யென்று சொல்லுச்சு..!
பாதுகாக்கும் தாயாக
பட்டி தொட்டி சொல்லுது
சாதுவாக இருந்த அதுவும்
சினந்து காடு வெல்லுது..!
பறவைக் கூட்டம் நாமெல்லாம்
போற்றி அதை வணங்குவோம்
சிறகாய் நாமும் இருந்துமே
பறக்க வைத்து மகிழுவோம்..!

யானையும் குட்டி குழந்தைகளும்

டிங் டாங் மணியோசை
தெரு முனையில் கேட்குது
அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது

அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது

ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது

கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி

காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது

அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது
பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது
அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது
டிங்டாங் மணியோசை இப்போ
தெருக்கோடியில் முடிஞ்சது

நல்ல குரங்கினம்

மனிதன் போல இருக்குது
மரத்தின் மேலே ஏறுது
கனியும் காயும் தின்னுது
காடு மலையில் வாழுது
இனிக்கும் கரும்பை ஒடிக்குது
இன்ப மாகத் தின்னுது
மனித னுக்கு வாலில்லை
மந்தி குரங்கைப் போலவே
கூட்டம் கூட்ட மாகவே
கூடி வாழும் குரங்கினம்
ஆட்டம் பாட்டம் போடுமே
ஆலம் விழுதில் தொங்குமே
ஓட்ட மாக ஓடியே
ஒன்றை யொன்று பிடிக்குமே
நாட்டித் தடியை ஓங்கவே
கடிக்கப் பாயும் நம்மையே!

பூனைக்குட்டி

பூனைக்குட்டி பூனைக்குட்டி கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன் கூட வராதே

பாலைக் குடித்து ஆட்டம் போடு கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு கூட வராதே

கோபப் பார்வை பார்க்க வேண்டாம் கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன் கூட வராதே

பள்ளிக்கூடம் போகின்றேன் கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார் கூட வராதே!


-பாவண்ணன்

பசுவே பசுவே

பசுவே பசுவே பால் தருவாய்
பச்சைப் புல்லை நான் தருவேன்

பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்
பதமாய்க் கோவா செய்திடுவேன்

மாலை நேரம் நண்பருடன்
மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!

மயிலே குயிலே

ஆடிக்களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித்தா

ஓடித்திரியும் இளங்கன்றே வா
அம்மா என்று சொல்லித்தா!

பறந்து திரியும் காக்கா வா
பகிர்ந்துண்ண சொல்லித்தா!

பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப் பாடச் சொல்லித்தா

தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்கச் சொல்லித்தா

கூவும் கோழி இங்கே வா
கூவி எழுந்திடச் சொல்லித்தா!

தாவித் திரியும் அணிலே வா
பழம் பறிக்கச் சொல்லித்தா!

குதித்து ஓடும் முயலே வா
கூடி வாழ சொல்லித்தா!
கிள்ளை மொழி பேசும் கிளியே வா
பிள்ளைத்தமிழ் சொல்லித்தா!

வாலை ஆட்டும் நாய்க்குட்டியே வா
வீட்டை காக்க கற்றுத்தா!



-வித்யா

காட்டில் ஒரு கல்யணம்

கருங்குருவி வீட்டில் ஒரு கல்யணம் நடந்ததாம்
காட்டில் உள்ள பறவையெல்லாம் கலந்து வேலை செய்திற்றாம்
ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்
இரண்டுக் குயில் பறந்து வந்து இனிமையாகப் பாடிற்றாம்
மூன்று மயில் நடந்து வந்து முனைந்தழகாய் ஆடிற்றாம்
நான்கு அன்னம் நடந்து வந்து நாட்டியங்கள் செய்திற்றாம்
ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை அலங்கரிக்கச் சென்றதாம்
ஆறு புறா கூடிப்பிள்ளை அழகுச்செய்ய போயிற்றாம்
ஏழு மைனா கூடிக்கொண்டு விருந்தினரை அழைத்ததாம்
எட்டுக் காடை கூடிக்கொண்டு கொட்டுமேளம் கொட்டிற்றாம்
ஒன்பது காக்கை கூடிக்கொண்டு உறவினரை அழைத்தாம்
பத்து கொக்கு பறந்து வந்து பந்தல் வேலை பார்ததாம்

Saturday, January 9, 2010

என்னை பற்றி ஒரு தகவல்

உடனே சொல்ல முடியாது கொஞ்சம் பொறுங்க சரியா.,